தினம் ஓர் ஊர் – இலுப்பூர் (Illupur) – 30/04/25

தினம் ஓர் ஊர் – இலுப்பூர் (Illupur)
மாவட்டம் – புதுக்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 219,491
கல்வியறிவு – 70.53%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – விராலிமலை
மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R
Chief Judicial Magistrate – Bro. K.S.Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)
District Munsif cum Judicial Magistrate – Sis. M. Sathathunisha (Illuppur)
ஜெபிப்போம்
இலுப்பூர் (Illupur) தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டத்தில உள்ள இலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். அதுமட்டுமின்றி இலுப்பூர் ஒரு கல்வி மாவட்டம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாவது மிகபெரிய நகரமாகும்.
இலுப்பூர் வட்டம், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தில் குடுமியான்மலை, சித்தன்னவாசல், வீரப்பப்பட்டி மற்றும் இலுப்பூர் என 4 உள்வட்டங்களும், 58 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த நகரம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த நகரமானது 10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்டுள்ளது.
இவ்வட்டம் 219,491 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 109,203 ஆண்களும், 110,288 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 84.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 50,022 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.51%, இசுலாமியர்கள் 5.11%, கிறித்தவர்கள் 4.17% மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.
இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முக்கிய தொழிலாக இருந்தது. நாளடைவில் இந்த தொழில் நலிவடைந்து விட்டது. இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். தொழிலில் கர்த்தர் ஆசீர்வாதத்தை கட்டளையிடும்படி ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இலுப்பூர் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம். இங்கு வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். விராலிமலை சட்டமன்ற உறுப்பினருக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். இலுப்பூர் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.